பெங்காலி நாளிதழான ஆனந்தபஜார் பத்ரிகா குஜராத் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி RCB அவர்களின் பயிற்சி அமர்வுகளை ரத்து செய்ததற்கும் இரு தரப்பும் செய்தியாளர் சந்திப்பை நடத்தாததற்கும் முக்கிய காரணம் விராட் கோலியின் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டியுள்ளது. திங்கள்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் மறைவிடத்தை சோதனை செய்த பின்னர், ஆயுதங்கள், சந்தேகத்திற்கிடமான வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாக கூறப்படுகிறது.

