மேலும், “நானும், என் மனைவியும், ஒரு நண்பரும் ரயிலில் செல்ல முடிவு செய்தோம். 3 ஏசி டிக்கெட்டுகள் கிடைத்தன. அதனால் அவற்றை முன்பதிவு செய்தோம். ரயில் நிலையத்திலோ அல்லது ரயிலுக்குள்ளோ யாராவது என்னை அடையாளம் கண்டு கொண்டால் என்ன செய்வது? என எங்களிடம் பேசிய அனைவரும் கவலைப்பட்டனர். அதனால் நான் ஒரு தொப்பி, மாஸ்க் அணிந்து கொண்டு கிளம்பினேன். அதிகாலை 5.10 மணி ரயில் என்பதால், பிளாட்பாரத்தில் அதிகமான மக்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்பினோம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏராளமான ரசிகர்கள் இருந்ததால், ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு வரை காரிலேயே காத்திருந்து அதன்பின் ரயிலில் ஏறினேன்.” என்று சிவம் துபே விவரித்துள்ளார்.


