• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || NDB வங்கியில் 13.2 பில்லியன் ரூபாய் மோசடி

GenevaTimes by GenevaTimes
April 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || NDB வங்கியில் 13.2 பில்லியன் ரூபாய் மோசடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இடம்பெற்ற உட்புற நிதி மோசடியின் பெறுமதி சுமார் 13.2 பில்லியன் இலங்கை ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட மிக அதிகளவான தொகையாகும்.


கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) வழங்கிய அறிவிப்பில், இந்த மோசடியானது வங்கியின் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இழந்த நிதியை மீட்பதற்கான நடவடிக்கைகள் சட்ட அமலாக்கப் பிரிவினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.


இந்த மோசடியினால் வாடிக்கையாளர்களின் கணக்கு மீதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், வங்கியின் நாளாந்த செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி உறுதி அளித்துள்ளது.


இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, இலங்கை மத்திய வங்கி NDB வங்கிக்குச் சில கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:


திட்டமிடப்பட்டிருந்த பண ஈவுத்தொகை (Cash Dividend) வழங்குவதை நிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


கிளைகளை விரிவாக்குதல் போன்ற அத்தியாவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


எனினும், பங்குகளை ஈவுத்தொகையாக வழங்கும் (Scrip Dividend) நடைமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மோசடியுடன் தொடர்புடைய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பிரிவின் ஆவணங்கள் மற்றும் தரவு அணுகல் முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அப்பிரிவு புதிய கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


இச்சம்பவம் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, வங்கியின் உட்புறக் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேலும் பலப்படுத்துவதற்காக சுயாதீன தடயவியல் தணிக்கை (Forensic Audit) ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் வங்கி அறிவித்துள்ளது.

வங்கியின் மூலதனம் மற்றும் திரவத்தன்மை பலமாக இருப்பதை உறுதி செய்ய இலங்கை மத்திய வங்கி தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 



Read More

Previous Post

ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது | Makkal Osai

Next Post

விசிட் மலேசியா 2026 திட்டம் 2027-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு – Malaysiakini

Next Post

விசிட் மலேசியா 2026 திட்டம் 2027-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin