ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 480 லீற்றருக்கும் அதிகமான டீசல் மற்றும் சுமார் 20 லீற்றர் பெற்றோல் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். R

