• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வெள்ளத்தால் புத்தளம் ரயில் சேவை பாதிப்பு

GenevaTimes by GenevaTimes
May 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வெள்ளத்தால் புத்தளம் ரயில் சேவை பாதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சீரற்ற காலநிலை காரணமாக நிலவும் வெள்ளப்பெருக்கினால், புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


புத்தளம் ரயில் பாதையில் அமைந்துள்ள நீலாதி பகுதியில், பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் தண்டவாளத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதியில் வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, புத்தளம் பாதையிலான ரயில் சேவைகள் புதன்கிழமை (13) மாலை முதல் வியாழக்கிழமை (14) முழுவதும் சிலாபம் வரை மட்டுமே முன்னெடுக்கப்படும். புதன்கிழமை (13)  இயக்கப்படவிருந்த புத்தளம் அலுவலக ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் வரை மட்டுமே பயணிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதேபோல், வியாழக்கிழமை (14)  காலை இயக்கப்பட வேண்டிய ரயில்கள் சிலாபம் ரயில் நிலையத்திலிருந்து தமது பயணங்களை ஆரம்பிக்கும். சிலாபம் மற்றும் புத்தளத்திற்கு இடையிலான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த மேலதிக தீர்மானங்கள், நிலவும் வானிலை மற்றும் வெள்ள நிலவரத்தைப் பொறுத்து அறிவிக்கப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


எனவே, புத்தளம் ரயில் பாதையை பயன்படுத்தும் பயணிகள் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்புகளைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




Read More

Previous Post

ரஃபிஸி, நிக் நஸ்மி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ‘புதிய அரசியல் திசையை’ அறிவிக்க உள்ளனர் | Makkal Osai

Next Post

Exclusive | “மத்திய அரசு உயர்த்திய வரி… தங்க கடத்தல் நாட்டில் அதிகரிக்கும்…” – ஜெயந்திலால் சலானி

Next Post
Exclusive | “மத்திய அரசு உயர்த்திய வரி… தங்க கடத்தல் நாட்டில் அதிகரிக்கும்…” – ஜெயந்திலால் சலானி

Exclusive | “மத்திய அரசு உயர்த்திய வரி… தங்க கடத்தல் நாட்டில் அதிகரிக்கும்…” – ஜெயந்திலால் சலானி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin