• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || விடுதியில் நஞ்சுக்கொடி: விசாரணைகள் ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || விடுதியில் நஞ்சுக்கொடி: விசாரணைகள் ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின்   பகுதி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


 ஆரம்பத்தில், மனிதக் கருவின் பாகங்கள் என சந்தேகிக்கப்பட்ட பகுதிகளை பார்த்த விடுதியின் துணை விடுதி கண்காணிப்பாளர்  அவற்றை புதைக்க நடவடிக்கை எடுத்திருந்தார். பின்னர், அவர் இது குறித்து துணை வேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித்க்கு தெரிவித்தார். 


மனிதக் கருவின் பாகங்களை பொலிஸாருக்குத் தெரிவிக்காமல் புதைக்க முடியாது என்று கூறிய துணை வேந்தர், உடனடியாக அது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு துணை விடுதி கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தினார். 


துணை வேந்தரின் அறிவுறுத்தலின் பேரில், துணை கண்காணிப்பாளர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினால் பேராதனை பொலிஸில் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 


பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களைச் சமர்ப்பித்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் புதைக்கப்பட்ட அந்த பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய பிரிவுக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. 


அந்த விசாரணையில், கண்டுபிடிக்கப்பட்ட பாகம் ஒரு நஞ்சுக்கொடியின் பகுதி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த நஞ்சுக்கொடியின் பகுதி விடுதியின் குளியலறைக்குள் எப்படி வந்தது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.


 சம்பவம் தொடர்பாக பொலிஸார் துணை கண்காணிப்பாளர் உட்பட சிலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மருத்துவம், விஞ்ஞானம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட பீடங்களின் இறுதி ஆண்டு மாணவிகள் உட்பட சுமார் 1200 மாணவிகள் இந்த விடுதியில் தங்கியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.  


 நஞ்சுக்கொடி என்பது கர்ப்ப காலத்தில் கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிக்கும் ஒரு உறுப்பு ஆகும்.


எம்.ஏ.அமீனுல்லா


 



Read More

Previous Post

மலாய்க்காரர்கள்தான் முதலில் கப்பல் கட்டினார்கள்

Next Post

பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் | 122 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு; 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை | Bihar Assembly elections 2025

Next Post
பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் | 122 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு; 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை | Bihar Assembly elections 2025

பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் | 122 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு; 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை | Bihar Assembly elections 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin