2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகிறது.
தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது பாதீடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலையை இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் அடையும் என்று ஜனாதிபதி தமது வரவு செலவுத்திட்ட உரையில் தெரிவித்தார்.
இந்த நிலையில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகி இதன் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது. R

