அஹங்கம, கபலான ரயில் கடவையில் வைத்து பெலியத்தவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக ரயிலுடன் மோதி வெளிநாட்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் மின்னணு மோட்டார் சைக்கிளில் (Electric Bike) பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற போது ரயில் கடவையின் சமிஞ்சை விளக்குகள் (Signal Lights) இயங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய ரஷ்ய நாட்டு யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


