பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் கைது செய்யப்பட்ட களுத்துறை மாவட்ட ‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் அபேகுணவர்தன இன்று வியாழக்கிழமை (31) மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சந்தேகத்திற்கிடமான ஜீப் பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட வாகனம் சம்பவம் தொடர்பாக கைது செய்யத் தேடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபய குணவர்தனவின் மகள், பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் புதன்கிழமை (30 ) வழக்கறிஞர் ஒருவர் மூலமாக சரணடைந்தார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் இன்று வியாழக்கிழமை (31) மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.