மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சூழல் மற்றும் அதன் சாத்தியமான உலகளாவிய தாக்கம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடினார்.
இது குறித்து இந்திய பிரதமர் மோடி தனது X தளத்தில்,
மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் நெருக்கடி குறித்தும், உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்தும் இந்த உரையாடலில் கவனம் செலுத்தியதாக பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முன்னெடுப்புகளின் முன்னேற்றத்தையும் இருவரும் ஆய்வு செய்தனர்.
இந்தியாவும் இலங்கையும் “நெருங்கிய மற்றும் நம்பகமான பங்காளிகளாக” தொடர்கின்றன என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார். குறிப்பாக எரிசக்தி நிலைத்தன்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய துறைகளில், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இணைந்து செயல்படுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். R

