வி.ரி.சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவன் வரதராஜன் டிலக்சன் இக் கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இவர் நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்றவராவார்.
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்றிட்டம் (The Brain Tumour Navigation System Project) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவன் வரதராஜன் டிலக்சன் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின்(Mechatronic Engineering Technology) பிரிவின், இறுதி ஆண்டு மாணவராவார்.

