
மத்திய மலைநாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் அடர்ந்த மூடுபனி பரவியுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-நுவரெலியா, ஹட்டன்-கொழும்பு மற்றும் துணைச் வீதிகளில் இந்த அடர்ந்த மூடுபனி நிலை நிலவுகிறது.
இந்த வீதிகளில் வாகனம் ஓட்டும்போது, வாகன முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை மெதுவாகவும் கவனமாகவும் செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ








