பிலிப்பைன்ஸின் பலவான் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ஜெஸ்லர் செர்வாண்ட்ஸ் என்ற மீனவர் பிடித்த ஆக்டோபஸ் ஒன்று, திடீரென அவரது முகத்தில் பாய்ந்து இறுகப் பற்றிக்கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் இருந்து ஆக்டோபஸை வெளியே எடுத்த சில நொடிகளில், அதன் உறிஞ்சிகள் மீனவரின் முகம் மற்றும் தலையைச் சுற்றிப் பற்றிக்கொண்டன. இதனால் அதனை அகற்ற முடியாமல் அவர் கடும் சிரமத்திற்கு உள்ளானார்.
ஆக்டோபஸை மிகவும் போராடியே தனது முகத்தில் இருந்து அகற்றியதாக மீனவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.


