
மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற மற்றொரு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த பயணிகள் மாத்தறை மற்றும் பத்தேகம ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

