நாவலப்பிட்டி ரயில் பாதையில் கலபொட மற்றும் இங்குருஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (23) காலை மரமொன்று வீழ்ந்தது.
இதனால், மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், வீதியில் வீழ்ந்துள்ள மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. R

