சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் போலி ஆவணங்களை தயாரித்து நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பை ஏற்படுத்திய பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், அரசு மருத்துவமனைகளுக்கு தரமற்ற ஆன்டிபாடி தடுப்பூசிகளை விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.