வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போன தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், கணவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெலிமடைப் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (17) மாலை பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இவர்கள் காணாமல் போயிருந்தனர்.
நேற்று இரவு முழுவதும் பிரதேசவாசிகளால் இந்தத் தம்பதியினரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் என்றும், காணாமல் போனவர் 37 வயதுடைய ஆண் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. R

