
கேகாலை பிரதேசத்தில் உள்ள பாடலொன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய வினாத்தாள் தாமதமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் மாணவர்களுக்கு நீதி வழங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையானது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு மிக முக்கியமான ஒரு பரீட்சை என்பதால், இவ்வாறான சம்பவங்கள் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திலீத் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இம்முறை உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காகச் சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என்பதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இதற்கமைய, உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் ஈடுப்படும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பொறுப்புக்கள் மற்றும் தற்போதைய செலவீனங்களைக் கருத்திற்கொண்டு, போதுமானதொரு கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் திலீத் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

