ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இந்தியாவின் புத்தகயாவிற்கு விஜயம் செய்தார்.
அங்கு, புத்தகயாவில் உள்ள மகா போதி மகா விஹாரைக்கு வழிபாடு செய்து ஆசிர்வாதம் பெற்றார். அனகாரிக தர்மபாலவால் 1891 இல் நிறுவப்பட்ட இந்திய மகா போதி சங்கத்தையும் நாமல் ராஜபக்ஷ பார்வையிட்டார். அங்கு, அவர் புத்தகயா மையத்தின் வணக்கத்திற்குரிய ஜினானந்தா மற்றும் முல்தெனியாவல சுசிலா தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.
திருமதி லிமினி ராஜபக்ஷவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.


