• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவன்

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 தன் மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகக் குடித்துவிட்டு ஏற்பட்ட சந்தேகத்தினால், மனைவியின் பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடூரமாகத் தாக்கியதுடன், 15 நாட்கள் வீட்டிற்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்த கணவனின் கொடூரச் செயல் புனேயில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து யாருக்காவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவன் மனைவியை மிரட்டியுள்ளான்.


கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்று இரவு கணவன் அதிகப்படியாக மது அருந்திவிட்டு, கடுமையான கோபத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற கோபமும், தன் மனைவிக்கு வெளியில் வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகமுமே அவனது இந்த வெறிச்செயலுக்குக் காரணமாகும். “நீ வேலைக்கு வெளியில் செல்லும்போது, அங்கே யாருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாய் என்று சொல்?” எனக் கேட்டுக்கொண்டே அந்தப் பெண்ணை அவன் இரக்கமின்றி மிருகத்தனமாக அடிக்கத் தொடங்கியுள்ளான்.


அவனது ஆத்திரம் மேலும் எல்லை மீறியதால், மனைவியைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளான். பின்னர், கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஆசிட்  பாட்டிலை எடுத்து, அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் ஊற்றியுள்ளான். இதனால் தாங்க முடியாத வலியால் அலறித் துடித்த அந்தப் பெண், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் உதவி தேடவும் வீட்டிலிருந்து வெளியே ஓட முயன்றுள்ளார். எனினும், அக்கொடூரக் கணவன் கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு, அவரை மீண்டும் கால்களால் உதைத்தும் கைகளால் குத்தியும் பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளான்.


அந்தப் பெண்ணின் மரண ஓலத்தைக் கேட்டு, அவரது நாத்தனார் (கணவனின் சகோதரி) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கணவனின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து யாரிடமாவது வாய்திறந்தால் உன்னைக் கொலை செய்துவிடுவேன் என அந்தப் பெண்ணை மீண்டும் மிரட்டிவிட்டு அவன் அங்கிருந்து சென்றுள்ளான். பின்னர், அன்றைய தினமே அவன் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.


15 நாட்கள் சிறைவைப்பு:


தீக்காயங்களால் ஏற்பட்ட கடுமையான வேதனையுடன், எவ்வித மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்படாத நிலையில் அந்தப் பெண் 15 நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளார். கடந்த மே 9ஆம் திகதி, கணவன் வேலைக்குச் சென்ற சமயம் பார்த்து, அந்தப் பெண் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.


தாய் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடூரச் சித்திரவதைகளை அழுதுகொண்டே அந்தப் பெண் விவரித்ததை அடுத்து, குடும்பத்தினர் அவரை உடனடியாகப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மே 15ஆம் திகதி பொலிஸில் உத்தியோகபூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண் சிகிச்சைக்காகப் புனேயில் உள்ள சசூன்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இச்சம்பவம் குறித்து உருளி காஞ்சன் (Uruli Kanchan) பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் ஆய்வாளர் சச்சின் வாங்கடே கருத்துத் தெரிவிக்கையில், குற்றஞ்சாட்டப்பட்ட கணவனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தற்போது மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


 


 



Read More

Previous Post

2025-இல் 15 பேருக்கு மட்டுமே மரண தண்டனை! – Malaysiakini

Next Post

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தேடுகிறது | Makkal Osai

Next Post
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தேடுகிறது | Makkal Osai

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தேடுகிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin