தற்போதைய அரசாங்கம் மாணவர்களின் கல்வியைப் பாதுகாப்பதற்கும் கல்வி முறையை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களிடம் கூறினார்.
கண்டியில் உள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டார்.
பிரதமர் மேலும் கூறியதாவது:
புதிய தொழில்நுட்பம், டிஜிட்டல் உலகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கல்விக் கொள்கையை நோக்கி நாட்டை வழிநடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தத்தின்படி, தரம் 6ஆம் தரத்திற்கான புத்தகங்களை அச்சிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கல்வி முறையில் பலவீனங்கள் ஏற்படும் போதெல்லாம் அரசாங்கம் அதில் தலையிடுகிறது.
அந்தக் குறைபாடுகளைத் தடுக்க எடுக்கக்கூடிய ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இலங்கையில் பாடசாலை பாடத்திட்டம் சுமார் 10 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. தற்போதுள்ள குறைப்பாடுகளை சரிசெய்து மிகவும் நம்பகமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய அரசாங்கமாக, தற்போதுள்ள அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையை மாற்றுவதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் தடைகளுக்கு மத்தியில் கல்வியை நம்பகமான சூழ்நிலையை நோக்கி வழிநடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். புத்தகங்களை அச்சிடும் போது ஏற்பட்ட பிரச்சினை குறித்து பல துறைகள் மூலம் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். R

