முல்லைத்தீவு முத்தியங்காட்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குமுளமுனை, நீத்தகை மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக விவசாய நிலங்களில் சிக்கித் தவித்த ஏழு விவசாயிகளையும், ஒரு சிறுவனையும் முல்லைத்தீவு மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் குழு திங்கட்கிழமை (01) அன்று பாதுகாப்பாக மீட்டனர்.


