• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நெதர்லாந்து தூதுவர் பிரதமரை சந்தித்தார்

GenevaTimes by GenevaTimes
December 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நெதர்லாந்து தூதுவர் பிரதமரை சந்தித்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், செவ்வாய்க்கிழமை (02) அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.


பல தசாப்த கால இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீண்டகால உறவு குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இரு தரப்பினரும் இந்த பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினர்.


சமீபத்திய அனர்த்தத்திலிருந்து இலங்கை மீண்டு வர ஆரம்பித்திருக்கும் இந்தச் சவாலான காலப்பகுதியில், இரு நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.


அனர்த்த பாதிப்புகளைக் குறைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து பிரதமரும் தூதுவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உறுதியான மீள்கட்டுமானம், மேம்பட்ட நீண்டகால திட்டமிடல் மற்றும் தேவைப்படும் உதவிகள் ஆகியன குறித்தும் அவர்கள் இதன்போது கவனம் செலுத்தினார்கள்.


இலங்கையில் சேதமடைந்த பல பாலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அவசரத் தேவை ஒரு முக்கியத் தேவையாக இருப்பதால், நாடு முழுவதும் உள்ள அத்தகைய பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்க நெதர்லாந்து விரும்புவதாக தூதுவர் தெரிவித்தார்.


மேம்பட்ட வெள்ள முகாமைத்துவம், இலக்கு வைக்கப்பட்ட முதலீடுகள் மற்றும் உள்ளக அபிவிருத்தி போன்ற துறைகளில் கூட்டு முயற்சிகள் நிலையான முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.


இந்தச் சந்திப்பில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சப்புத்தந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகாவத்த, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர்  திவங்க அத்துரலிய ஆகியோர் இலங்கைத் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.




Read More

Previous Post

2026ல் “ஊழியர்களுக்கு வேலை இல்லை.. சம்பளம் உயராது” – பெரும்பாலான முதலாளிகளின் கருத்து

Next Post

டெல்லியில் அமித் ஷா உடன் 20 நிமிடங்கள் ஆலோசித்த ஓபிஎஸ்.. அடுத்த மூவ் என்ன? | இந்தியா

Next Post
டெல்லியில் அமித் ஷா உடன் 20 நிமிடங்கள் ஆலோசித்த ஓபிஎஸ்.. அடுத்த மூவ் என்ன? | இந்தியா

டெல்லியில் அமித் ஷா உடன் 20 நிமிடங்கள் ஆலோசித்த ஓபிஎஸ்.. அடுத்த மூவ் என்ன? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin