2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை 21) நடைபெறவுள்ள மத வழிபாடுகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பொலிஸாரின் அறிவிப்பின்படி, இந்தப் போக்குவரத்துத் திட்டம் செவ்வாய்க்கிழமை (21) காலை 7:00 மணி முதல் நினைவுத் தின வழிபாடுகள் நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்கும். இக்காலப்பகுதியில், திருத்தலத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் அல்லது பக்தர்களின் வருகை மற்றும் பாதுகாப்பு தேவைகளைக் கருத்திற்கொண்டு மாற்று வழிகளுக்குத் திருப்பிவிடப்படும்.
ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பொறுமையுடன் ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

