தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி மருதங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்ட தனது மகனை பார்ப்பதற்காக சென்றவேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதிக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் மகன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். (a)

