[ad_1]
மக்களின் வியர்வை, குருதியை கணக்கிலெடுக்காது, கடந்தகாலங்களில் வசதி வாய்ப்புடன் வாழ்ந்த முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகையை இல்லாமற் செய்யவேண்டும் என்று வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், அமுலில் இருக்கும் சில சட்டங்கள் தேவையில்லாதவை, அவ்வாறான தேவையில்லாத ஆணிகளை நாங்கள் எங்களுடைய ஆட்சியில் புடுங்குவோம் என்றார்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.