ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தின் ஆணையை நீட்டித்துக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துமாறான ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் முன்மொழிவுக்கு மத்தியில், இவ்வாறான நகர்வொன்று அடிப்படைக் கொள்கைகளைக் கேள்விக்குட்படுத்துமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேர்தல்களை ஒத்தி வைப்பது எந்தவொரு ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானதல்லதெனத் தெரிவித்த நாமல், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதானது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கொள்கைகளை கேள்விக்குட்ப்படுத்துகிறதெனவும், உறுதித்தன்மையானது மக்களின் ஆணையால் வரவேண்டும் என்றும் அவர்களின் குரலைத் தாமதப்படுத்தவதால் அல்ல எனக் கூறியுள்ளார்.

