
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது பிடிவிராந்தை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது வழக்கறிஞர் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்களான முகமது லாஃபர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை மார்ச் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

