தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் குழப்பமான முறையில் நடந்து கொண்டு, துப்பாக்கியைக் காட்டி அதன் ஊழியர்களைத் தாக்கிச் சேதங்களை ஏற்படுத்தியமை மற்றும் சொத்துக்களைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இரண்டு பொலிஸ் சாஜன்கள் உட்பட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 9 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
நீண்ட கால வழக்கு விசாரணையின் பின்னர், சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்த நீதிபதி, இந்தத் தண்டனைக் காலத்தை 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாகக் தீர்ப்பளிக்கப்பட்டதன் காரணமாக தண்டனை விதிக்கப்பட்டவர்கள், முன்னர் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டு தற்போது நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்களான லியனகே வசந்த ஜயகொடி, சமிந்த பண்டார சகலசூரிய உள்ளிட்ட மூவராவர்.

