யாழ்ப்பாணம், நெடுந்தீவு – 9 ஆம் வட்டாரப் பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் இரவு இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது
ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக மேற்படி துப்பாக்கி நேற்று பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


