
டி.கே.ஜி. கபில
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புதன்கிழமை (04) அன்று 04 விமான சேவைகள் இயக்கப்படுவதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அதன்படி, புதன்கிழமை (04) பிற்பகல் 01:34 மணிக்கு ஃபிட்ஸ் எயார் (FitsAir) நிறுவனத்தின் 8D-821 விமானமும், பிற்பகல் 02:30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-231 விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளன.
மேலும், புதன்கிழமை (04) இரவு 06:15 மணிக்கு ஃபிளை துபாய் (flydubai) நிறுவனத்தின் FZ-570 விமானமும், இரவு 09:50 மணிக்கு எமிரேட்ஸ் (Emirates) நிறுவனத்தின் EK-655 விமானமும் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கிப் புறப்படத் தயாராக உள்ளன.
அதேபோல், புதன்கிழமை (04) அதிகாலை 12:00 மணிக்கு ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து ஸ்மார்ட் விங்ஸ் (Smartwings) நிறுவனத்தின் 3Z-7648 விமானம் சரக்குகளுடன் வருகை தந்தது. அதிகாலை 12:05 மணிக்கு ஃபிட்ஸ் எயார் (FitsAir) நிறுவனத்தின் 8D-822 விமானம் 133 பயணிகளுடனும் 06 ஊழியர்களுடனும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இவை தவிர, புதன்கிழமை(04) பிற்பகல் 04:50 மணிக்கு ஃபிளை துபாய் (flydubai) நிறுவனத்தின் FZ-569 விமானமும், இரவு 06:45 மணிக்கு எமிரேட்ஸ் (Emirates) நிறுவனத்தின் EK-654 விமானமும் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளன.

