• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: இனி தற்காலிகம் இல்லை

GenevaTimes by GenevaTimes
May 2, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: இனி தற்காலிகம் இல்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




2026 வரவுசெலவுத் திட்டத்தின் படி, அரச துறை நிறுவனங்களில் தற்காலிக, (நாட்சம்பளம்), பதிலீடு, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்பதுடன், எதிர்காலத்தில் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சுகளின் செயலாளர்கள்,  மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கமைவான சபைகளின் தலைவர்களுக்கு அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவின் கையொப்பத்தில்  அனுப்பிவைத்துள்ள சுற்றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


2026 வரவுசெலவுத் திட்டத்தின் படி, அரச துறை நிறுவனங்களில் தற்காலிக, (நாட்சம்பளம்), பதிலீடு, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்.


2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, அரச துறை நிறுவனங்களில் தற்காலிக, அனல் (நாட்சம்பளம்), பதிலீடு, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் அவ்வாறான அடிப்படையில் பணியாற்றி சுற்றறிக்கை விதிகளின்படி நிரந்தர நியமனம் பெற்று, ஆனால் அந்த நியமனங்கள் முறைப்படுத்தப்படாத ஊழியர்கள் தொடர்பில் இந்தச் சுற்றறிக்கையின் விதிகளுக்கமைய செயற்படுவதற்கு 2026.04.27 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


 


02. அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகள் 25/2014 மற்றும் 25/2014(I) ஆகியவற்றை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்த 2019.09.18 திகதியிட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 29/2019 இன் படி, 2019.09.01 ஆம் திகதியன்று பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள, தற்போது சேவையில் உள்ள ஊழியர்களுக்கு அன்றைய திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்: 


I. 2019.09.01 ஆம் திகதிக்கு 180 நாட்கள் திருப்திகரமான மற்றும் தொடர்ச்சியான சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும் (முறைப்படியான விடுமுறை மற்றும் அரச விடுமுறை நாட்களால் சேவை முறிவு ஏற்படாது). 


II. குறித்த பதவிக்குரிய தகைமைகளைச் சுற்றறிக்கையின்படி பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். 


III. அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 25/2014 இல் குறிப்பிடப்பட்டுள்ள சேவை வகைகளைச் சார்ந்தவராக இருப்பதோடு, தகைமை பூர்த்தி செய்யும் அதே பதவி அல்லது அதே நிறுவனத்தின் அதே சம்பள அளவீட்டுக்குள் தற்போது வரை தொடர்ச்சியாகப் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும். 


IV. நிரந்தர நியமனங்கள் 2019.09.01 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படும் திகதியில் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தரப் பணியாளர் குழாமில் வெற்றிடங்கள் இருந்தால் மட்டுமே அந்த வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு நியமனம் வழங்கப்பட வேண்டும். வெற்றிடங்கள் இல்லையெனில், அந்தப் பதவி வகிப்பவருக்கு “தனிப்பட்ட ரீதியிலான” (Personal to holder) நிரந்தரப் பதவியாகப் பேணப்பட வேண்டும். 


V. தனிப்பட்ட ரீதியிலான நியமனம் வழங்கப்பட்டிருக்கும் போது, முறையான பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்படும் போது புதிய ஆட்சேர்ப்புக்களைச் செய்யாது, இவர்களை அந்த வெற்றிடங்களுக்கு முகாமைத்துவ சேவை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் உள்வாங்க வேண்டும்.


VI. நிலுவைச் சம்பளம் வழங்கப்படமாட்டாது. அதிகாரிகள் நிரந்தர நியமனம் பெறும் திகதியிலிருந்து அவர்களின் சம்பளம் மற்றும் விடுமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். 


VII. கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பயிற்சி நெறிகளை ஒழுங்கு செய்து நிரந்தர நியமனம் வழங்க நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


03. இந்தச் சுற்றறிக்கையின் கீழ் நிரந்தர நியமனம் பெறும் ஊழியர்கள் தொடர்பான தகவல்களை இணைப்பு 01 மற்றும் 02 இல் உள்ள படிவங்களின்படி முகாமைத்துவ சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு நிறுவனத் தலைவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். 


04. இவர்களுக்குத் தேவையான தகைமைகளை பூர்த்தி செய்ய வசதிகள் வழங்கப்பட்டு, ஒரு வருட காலத்திற்குள் சேவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவரை சேவையில் உள்ளவர்கள் தகுதிகாண் காலத்தைப் பூர்த்தி செய்ததாகக் கருதப்படுவர். 2019.09.01 முதல் நிரந்தர நியமனம் வழங்கும் திகதி வரையிலான காலம் தகுதிகாண் காலமாக நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட வேண்டும். 


05. மேலதிகமாக உள்ள ஊழியர்களை வேறு நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு இடமாற்றுவது குறித்து பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் அல்லது நிறுவனத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


06. ஒருங்கிணைந்த சேவையைச் சேர்ந்த ஊழியர்களை இடமாற்ற அல்லது நியமனக் கடிதங்களை வழங்க ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. 


 


07. முந்தைய சுற்றறிக்கைகளின் கீழ் நிலுவையில் உள்ள பதவி அங்கீகாரக் கோரிக்கைகளை முகாமைத்துவ சேவைத் திணைக்களம் விரைவாக வழங்க வேண்டும். 


08. முந்தைய சுற்றறிக்கைகளுக்கு முரணாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டவர்கள் தொடர்பான நடைமுறைகள்: 


i. 45 வயதிற்கு மிகாத, ஆனால் வேறு திகதிகளில் நிரந்தர நியமனம் பெற்றவர்களின் நியமனங்கள் முறைப்படியானதாக ஏற்றுக்கொள்ளப்படும். 


ii. 45 வயதிற்கு மேல் இருந்து நிரந்தர நியமனம் பெற்றவர்களின் நியமனங்கள் அரசாங்க ஊழியர் சேமலாப நிதிய (PSPF) அடிப்படையிலான நியமனங்களாகக் கருதப்படும். 


09. அரசாங்கப் பணியில் ஈடுபட வேறு வழிகளில் தகுதியற்ற எவருக்கும் இந்தச் சுற்றறிக்கையின் கீழ் நிரந்தர நியமனம் வழங்கப்படக் கூடாது. 


10. இனிவரும் காலங்களில் தகுதியற்றவர்களையோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் கோப்பிற்கு வெளியிலோ தற்காலிக/ஒப்பந்த அடிப்படையில் எவரையும் நியமிக்கக் கூடாது. மீறி நியமிக்கப்பட்டால் அதற்கு நியமன அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும். 


11. இந்தச் சுற்றறிக்கை மகா திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்படுகிறது. 


 


 



Read More

Previous Post

இலங்கையின் பல மாகாணங்களில் பிற்பகலில் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் – Sri Lanka Tamil News

Next Post
மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் – Sri Lanka Tamil News

மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin