ஜிந்துபிட்டியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையை சரிவரச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாக செயற்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி ஜிந்துபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. R

