சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பது தொடர்பான புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
இந்த ஒழுங்குமுறை நேற்று முன்தினம் (24) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி, வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு ஒரு நாட்டில் சர்வதேச நாணய கடிதம் திறக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், அந்த வாகனங்களை விடுவிக்க அனுமதிக்கப்படுகிறது. (a)

