சித்தாண்டி – வேலோடு மலை முருகன் ஆலயத்தில் அகத்தியர் மகாசித்தர் அருளால் பஞ்ச பூத தலங்களில் ஆற்றலை வேலோடு மலைக்கு தரும் சுயம்பு பஞ்சலிங்க பிரதிஷ்டை அண்மையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது அகத்தியர் மகாசித்தரின் ஜீவ நாடி வாக்கில் உரைக்கப்பட்டதன் படி
நர்மதை நதியில் உருவான பஞ்ச சுயம்பு லிங்கங்கள் காசி கங்கையில் அபிஷேக பூஜைகள் செய்து காசியில் இருந்து கொண்டு வரப்பட்டு திருவண்ணாமலையில் 10 நாட்கள் பூஜிக்கப்பட்டு, ஜீவ நாடி அருளாளர் சிவ ஜானகி ராமன் அவர்கள், திரு. கார்த்திக் அவர்கள் மற்றும் அகத்தியர் கூட்டுபிரார்தணை குழுவினரால் வேலோடு மலைக்கு கொண்டுவரப்பட்டது.
வைகாசி விசாக முகூர்த்தத்தில் இலங்கை சித்தர் பீட குருமுதல்வர் யோகி கோபிநாத் சுவாமிகள், சித்தர்களின் குரல் குருஜி சித்தவித்யார்த்தி சிவ சங்கர் சுவாமிகள் ஆலய பூசகர் முத்துலிங்கம் தவராஜா கப்புவனார் ஆகியோரால் ஆலய தர்மகர்த்தா திரு சுப்பிரமணியம் தியாகராஜா அவர்களின் தர்ம பத்தினி திருமதி தனலட்சுமி அம்மையார் ,ஆலய நிர்வாக சபையினர் ,பக்தர்கள் ,அன்பர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த அருள்நிறைந்த பஞ்ச லிங்கங்களுக்கு பக்தர்கள் அவர்களின் கரங்களாலே அபிஷேகம் பூஜைகள் செய்து வழிப்படமுடியும். R


