78ஆவது சுதந்திர தினமான புதன்கிழமை (04) அன்று புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின விசேட பூஜை வழிபாடுகள் கொழும்பு, மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இவ்வழிபாட்டு நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனிருத்தனன், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


