கொஹுவலைப் பகுதியிலுள்ள மாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் சீன நாட்டுத் யுவதி ஒருவர், அவரது காதலன் எனச் சந்தேகிக்கப்படும் நபரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 26 வயதுடைய சீன நாட்டு யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும், தாக்குதலை நடத்திய சீன நாட்டு இளைஞர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் நடந்த போது அங்கிருந்த மற்றொரு சீன நாட்டவர் ஒருவரின் கையில் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் சிகிச்சைக்காக களுபோவில (தென் கொழும்பு) போதனா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொஹுவலைப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.


