கனமழை மற்றும் நீர் மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, அத்தனகலு ஓயா படுகை மற்றும் யான் ஓயா படுகைக்கு நீர்ப்பாசனத் துறை அவசர சிவப்பு நிலை வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்பாளர்கள், வாகன சாரதிகள் மற்றும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் இருக்கவும், உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறார்கள். (a)


