டொமினிக்கன் குடியரசின் சாண்டோ டொமிங்கோ (Santo Domingo) பகுதியில், சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனை ரோட்வீலர் (Rottweiler) இன நாய் ஒன்று திடீரெனப் பாய்ந்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது வீதியில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் உடனடியாகத் தலையிட்டு நாயை விரட்டிச் சென்றதுடன், படுகாயமடைந்த சிறுவனைக் காப்பாற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.
மனதைப் பதறச் செய்யும் வகையில் அமைந்துள்ள இச்சம்பவம், வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் உரிமையாளர்களின் பொறுப்புணர்வும், குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பும் எவ்வளவு முக்கியமானது என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை கடுமையாக நினைவூட்டியுள்ளது.

