சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கார் பாஸ் ஸ்டிக்கர்களை அகற்றுவது தொடர்பாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
சபையில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, மோட்டார் போக்குவரத்து மற்றும் பொலிஸ் உட்பட அரசாங்கத்தால் அத்தகைய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
வைத்தியர்களை அடையாளம் காணவும், மருத்துவமனைகளுக்கு எளிதாகச் செல்லவும் கார் பாஸ்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
“அரசாங்கம் அத்தகைய எந்த அடையாள ஆவணத்தையும் நீக்க எதிர்பார்க்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

