உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் 300 தொடக்கம் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட இஞ்சியின் விலை, தற்போது 1 கிலோ கிராம் 1,500 ரூபாய் தொடக்கம் 2,000 ரூபாய் வரையான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இஞ்சிச் செய்கைகள் அழிவடைந்துள்ளது எனவும் இந்நாட்களில் உள்ளூர் சந்தையில் பச்சை இஞ்சிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மரக்கறி வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

