கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) வளாகத்திலிருந்து இளம் பெண்ணொருவரை கடத்திச் சென்றதாக கூறப்படும் காரொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
நாரஹேன்பிட்டி, நாவல வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளே இளம் பெண்ணொருவரை கடத்திச் சென்றதாக கூறப்படும் வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் வாகனத்தை விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R

