மனம்பிட்டிய – அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பகுதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (20) காலை இடம்பெற்றுள்ளது. இதில் கண்டேகம தம்மின்ன பகுதியில் வசிக்கும் 2 வயது குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R

