• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || குடு மாலியின் மகள் படுகொலை: இருவர் கைது

GenevaTimes by GenevaTimes
August 1, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || குடு மாலியின் மகள் படுகொலை: இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பல முறை தண்டிக்கப்பட்ட குடு மாலி என்ற பெண்ணின் மகளை படுகொலைச் செய்த மற்றும் அந்த பெண்ணின் மகனுக்கு படுகாயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருவர், வியாழக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.


பங்கதெனிய மற்றும் பல்லம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 மற்றும் 33 வயதுடையவர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், மாதம்பே இரட்டகுளம் பகுதியில் உள்ள ஒரு கழிவறையில் தாழ்த்தப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


முந்தைய செய்தி…


மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு  முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது மூத்த குழந்தை படுகாயமடைந்ததாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.


 கொலை செய்யப்பட்டவர் மாரவில, மாரடை பகுதியைச் சேர்ந்த எதிரிசிங்க ஆராச்சிகே வசந்தி சதுராணி எனப்படும் சதாமாலி என்ற 30 வயதுடைய பெண்ணாவார்.    


ஏதோ ஒரு வேலைக்காகச் சென்றுவிட்டு வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் தனது பத்து வயது மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு, முச்சக்கர வண்டிக்குள் இறந்ததாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.


 துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவரது பத்து வயது மகன்  மாரவில பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இறந்தவர், மாரவில மாரடை பகுதியில் பிரபல ஹெரோய்ன் மற்றும் பிற போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குடு மாலி என்ற பெண்ணின் மூத்த மகள் என்று கூறப்படுகிறது.


குடு மாலி என்ற   பெண், போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு பல முறை போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பெண் என்றும் கூறப்படுகிறது.


அதே நேரத்தில்,  குடு மாலியின் மூன்று மகள்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பெண்ணும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்,


மேலும் தாயும் மூன்று மகள்களும் மராடை உட்பட பல பகுதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகவும், இதன் விளைவாக, பல இளம் உயிர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, பொதுமக்களின் பெரும் அதிருப்திக்கு ஆளான ஒரு குடும்பமாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.


கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தற்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


விசாரணையை நடத்தி வரும் மாரவில பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் கூறுகின்றனர்.


துப்பாக்கிச் சூடு தொடர்பாக பல பிரிவுகளின் மூலம் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன, மேலும் இது போதைப்பொருள் தொடர்பான தகராறின் விளைவாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.



Read More

Previous Post

ஆகஸ்ட் 1 முதல் பேராக் தவிர அனைத்து தீபகற்ப மாநிலங்களிலும் தண்ணீர் கட்டணம் உயர்வு – Malaysiakini

Next Post

செம்மர கடத்தல் வழக்கு : தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை | இந்தியா

Next Post
செம்மர கடத்தல் வழக்கு : தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை | இந்தியா

செம்மர கடத்தல் வழக்கு : தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin