
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சனிக்கிழமை (24) மாலை மூன்று பேரை ஏற்றிச் சென்ற கார் கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடைய பெண். காயமடைந்த இருவரும் 30/36 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் ஆவர்.
கொழும்பிலிருந்து மத்தள நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது, பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 89.6 கி.மீ தொலைவில் இடதுபுறத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓட்டுநருக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் அல்லது டயர் வெடித்ததாலா இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காரின் தடுப்புச் சுவருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பின்னதுவ போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

