களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல்கலைக்கழக வீதியிலுள்ள நிர்வாகக் கட்டிடத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக விடுதிகளை இரவு 10:00 மணிக்கு மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.



