• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கல்முனை,சாய்ந்தமருது தேர்தலை நடத்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
May 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கல்முனை,சாய்ந்தமருது தேர்தலை நடத்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்களை, சட்டத்திற்கு அமைய நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (07) அன்று உத்தரவிட்டுள்ளது.


சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இரு குடியிருப்பாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பை வழங்கிய போதே, நீதியரசர்களான ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.


தாங்கள் சாய்ந்தமருது நகர சபை எல்லைக்குள் வசிப்பவர்கள் என்றும், எனினும் 2020-ஆம் ஆண்டு வேட்புமனுக்கள் கோரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் சாய்ந்தமருது உள்வாங்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர். சாய்ந்தமருது பகுதியை ஒரு நகர சபையாக வர்த்தமானியில் சேர்க்காதது, அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தங்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.


இந்தத் தீர்ப்பின் ஒரு பகுதியாக, சட்டமா அதிபர் ஊடாகக் குடியரசுத் தலைவருக்கு (ஜனாதிபதிக்கு) உயர் நீதிமன்றம் மற்றுமொரு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் தேசியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வட்டாரங்களின் எண்ணிக்கை, அவற்றின் எல்லைகள், பெயர்கள் மற்றும் எண்கள் அல்லது அகர வரிசை எழுத்துக்களைக் குறிப்பிட்டு புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.



Read More

Previous Post

சுங்கை பட்டாணியில் 5 நாட்களாகத் தேடப்பட்டு வந்த முதியவர் சடலமாக மீட்பு | Makkal Osai

Next Post

மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதில் நான் தோல்வியடைந்துவிட்டேன் – டாக்டர் மகாதீர் 

Next Post

மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதில் நான் தோல்வியடைந்துவிட்டேன் – டாக்டர் மகாதீர் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin