
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக அதிகரித்துள்ள டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையைக் குறைப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து, இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், அதனை இலங்கையில் நடைமுறைப்படுத்த நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலும், பொதுமக்களின் நலன் கருதி டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த எரிபொருள் நிவாரணக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே, எரிபொருள் விலை தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானம் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

