
எஸ்.சதீஸ்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை உருவளி தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் சிக்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) அன்று இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்தை திறந்து ஆலயத்தில் உள்ள பணிகளை முன்னெடுப்பதற்கு ஆலயத்திற்கு வந்த குருக்கள் சிறுத்தையை கண்டுள்ளார்.
இது தொடர்பாக பொதுமக்கள் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் ஊடாக நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுத்தையை பிடிப்பதற்கு வனவிலங்கு அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வரவிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுத்தை சாமி கும்பிடுவதற்கு வந்ததோ… என அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

