
பாகிஸ்தான் சுப்பர் லீக்கானது (பி.எஸ்.எல்) ஈரான் போர் காரணமாக வெற்று அரங்கங்களில் நடைபெறவுள்ளது.
இதேவேளை முன்னர் திட்டமிடப்பட்டது போல் ஆறு இடங்களில் அல்லாமல் இரண்டு இடங்களிலே தொடர் நடைபெறவுள்ளது. அனைத்துப் போட்டிகளும் லாகூர் அல்லது கராச்சியிலேயே நடைபெறவுள்ளது.
இந்நிலையில் லாகூரில் நடைபெறவிருந்த ஆரம்ப நிகழ்வும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஈரானில் நெருக்கடி முடிவடைந்தால் இரசிகர்களுடன் தொடரின் இறுதிப் பகுதிகள் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
